திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு கொப்பரை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலையில் தீப திருவிழாவை முன்னிட்டு தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு கொப்பரை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலையில் தீப திருவிழாவை முன்னிட்டு தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக காவல் தெய்வங்களின் 3 நாள் உத்ஸவம் நேற்று தொடங்கியது. 

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் மிக முக்கியமான விழா கார்த்திகை தீபத் திருவிழா. நிகழாண்டு வரும் புதன்கிழமை (நவம்பர் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 6 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றப்படும் மகா தீபம் 40 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும்.

தீபம் எற்றும் போது வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம் 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு 150 கிலோ எடையில் 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 22-ம் தேதி மலை உச்சிக்குக் கொப்பரை கொண்டுசெல்லப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com