மகா பைரவர் கோயிலில் நவ.22இல் தர்ப்பண மண்டப பூமி பூஜை

செங்கல்பட்டை அடுத்த ஈச்சங்கரணை ஸ்ரீபைரவர் நகரில் அமைந்துள்ள மகா பைரவர் கோயில் வளாகத்தில் தர்ப்பண
மகா பைரவர் கோயிலில் நவ.22இல் தர்ப்பண மண்டப பூமி பூஜை


செங்கல்பட்டை அடுத்த ஈச்சங்கரணை ஸ்ரீபைரவர் நகரில் அமைந்துள்ள மகா பைரவர் கோயில் வளாகத்தில் தர்ப்பண மண்டபத்துக்கான பூமி பூஜை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. மகா பைரவர் ஜெயந்தி விழா வரும் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 
திருவடிசூலம் சூலம் சாலையில் ஸ்ரீபைரவர் நகரில் அமைந்துள்ள மகா பைரவர் கோயிலில் தர்ப்பண மண்டபம் கட்டப்பட உள்ளது. இந்த இடத்திற்கான பூமி பூஜை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதியன்று பைரவாஷ்டமியை முன்னிட்டு, இக்கோயிலில் úக்ஷத்திர பால பைரவருக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விசேஷ பூஜை, ஹோமம், அபிஷேகங்கள் ஆகியவை நடைபெறவுள்ளன. 
இவ்விழாவை முன்னிட்டு, வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெறும். அதையடுத்து அன்று மாலை கொடியேற்றமும் மூலவருக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். 30ஆம் தேதி காலை 6 மணிக்கு பைரவருக்கு நித்ய அபிஷேகம், 10 மணிக்கு உற்சவர் மகா அபிஷேகம், 12 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மகா பைரவருக்கு சிறப்பு ஹோமம், மாலை 5 மணிக்கு மூலவருக்கு பைரவாஷ்டமி சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு மகா பைரவருக்கு மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும். அதன் பின், உற்சவர் மாடவீதி உலாவைத் தொடர்ந்து, கொடியிறக்கம் நடைபெறும். 
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மகா பைரவர் சுவாமிகள், கோயில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com