கும்பகோணம் பகுதியில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் உறியடி உற்சவ விழா நேற்று மாலை (4-9-2018) நடைப்பெற்றது
இதில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் அருள்மிகு "ஸ்ரீசாரங்கபாணி" ஆலய ஆராவமுத பெருமாள், தென்னக அயோத்தி என்று அழைக்கப்படும் "இராமஸ்வாமி" இராம பிரான், உலகில் பிரம்மனுக்கென்று உள்ள தனி ஆலயமான, "பிரமன்" கோயில் ஸ்ரீவேதநாராயண பெருமாள், ஸ்ரீவரதராஜ பெருமாள், கடைத்தெரு "இராஜகோபாலசுவாமி". பாட்ராஜர் தெருவில் உள்ள "கிருஷ்ணன் கோயில்" கிருஷ்ண ஸ்வாமி ஆகிய திருக்கோயில்களிலும் உறியடி உற்சவமும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடைப்பெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தார்கள்.
- குடந்தை .ப.சரவணன் - 9443171383