கும்பகோணம் பகுதியிலுள்ள, அருள்மிகு மடத்துத் தெரு, பகவத் விநாயகர் ஆலயம், காசிராமன் தெருவிலுள்ள, வேத விநாயகர் ஆலயம் ,யானையாடி - ஜெகந்நாத விநாயகர் ஆலயம், பாலக்கரை அருகிலுள்ள, இரட்டை விநாயகர் ஆலயம், ஏஆர்ஆர் சாலையில் உள்ள தாமோதர விநாயகர் ஆலயம்
அதன் அருகிலுள்ள ஸ்ரீவிநாயகர் ஆலயம், மற்றும் கும்பகோணத்தை அடுத்துள்ள, சுவாமிமலை- சுவாமிநாதசுவாமி ஆலயத்திலுள்ள, ஸ்ரீவல்லப கணபதி சன்னதி , சுவாமிமலை - மேல வீதியிலுள்ள, கார்னர் விநாயகர் ஆலயம், காமராஜ்நகர் -ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், தூப- தீபாராதனை வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து உற்சவ விநாயக பெருமான் வீதிஉலா திருக்காட்சியும் நடைப்பெற்றது.
மேலும் திருப்புறம்பயம் - பிரளயங்காத்த விநாயகருக்கு 14-9-2018 அன்று மாலை முதல் விடியல் 2 மணிவரை சிறப்பு தேனபிஷேகம் நடைப்பெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தார்கள்.
திருவலஞ்சுழி - சுவேதவிநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைப்பெற்று வந்த பெருவிழாவில் திருத்தேரோட்டமும் நடைப்பெற்றது
.