பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் தங்க குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று தங்க குதிரை

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று தங்க குதிரை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஏழுமலையான் ஏழுந்தருளி வலம் வந்தார். 

திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.

இதைதொடர்ந்து, இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் நாச்சியார்களுடன் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வருகிறார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com