மழைநீர் போல: ப.வீரக்குமார்

மழைநீர் போல 
மலையாது 
தந்தவன் கர்ணன் 
மழைநீர் போல 
மகத்துவம் 
கொண்டவன்
கண்ணன்

மழைநீர் போல
மகிமை மாற
நீரைச்சுமப்பவன் 
நீலகண்டன் 
மழைநீர் போல 
மண் மனம் தந்த 
கவி 
காளமேகம் 

மழைநீர் போல் 
மணிவண்ணன் அம்பு 
அரும்பினாள் 
ஆண்டாள் 
மழைநீர் போல 

மகிழ்வைத் தருவான் 
தமிழ் கொண்ட 
தண்டபாணி 
மழைநீர் போல 
மண் புகுவது 
எளியோரைக் கலந்து 
ஏற்றும் வழி 
மழைநீர் போல 
ஈ தா கொடுவென 
கேளாத அரசன்
மழைநீர் போல 
மக்களை
சமமாய் பாவிக்கும் 
சாது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com