மாண்பான கருவறையில்
மறைபொருளை புதைத்து
மானுடம் படைக்கும்,
பெண் எனும் பிரபஞ்சம்,
மானுடம் கற்கும் முதல்
பாடம் "அம்மா"
பெண்ணவளின்
பெருமைக்கும் மேலே,
பெற்றபேறு,
மானுடம் மரித்தாலும்
பெறமுடியாத "மார்பால்",
மறுக்கமுடியாத
மருத்துவ குணம்,
மானுடம் பெரும்
முதல் உணர்ச்சி,
"அன்பாக",
அதுவும் அவளாக,
மரிக்கும்போதும் மானிடரின்
உயிர் போக கொடுக்கும் பாலும்
தாயின் மறை உண்மையே!
மானுடம் புவியில் வாழ,
உற்ற,உறுதுணையான,
மரியாதைமிக்க,மதிப்பான
இனம்,
பெண் எனும் பிரபஞ்சம்