மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: முத்துலெட்சுமி

வீரத்தமிழர்
எங்கள்வீட்டு செல்லப்பிள்ளை
எங்களோட காளை
புல்லோடு பாசத்தையும்
போட்டுத்தான் வளர்த்தோம்

கொம்புமுதல் வாலுவரை
கொஞ்சிகொஞ்சி ரசிப்போம்
அம்மாயென்று அதுபோடும்
சத்தத்தில்தான் விழிப்போம்

நந்திய வணங்கித்தான்
சிவனையே பாப்போம்
திருவிழாவில் எங்கவீட்டில்
தெய்வமே மாடுதான்

எங்கமண்ணின் வீரத்த
காங்கேயம் சொல்லும்
ஆப்பிரிக்க யானைக்கூட
அதுமுட்டித் தள்ளும்

இமயம்போல எழுந்துநிற்கும்
காங்கேயம் திமில்அழகு
எகிறிவரும் காளைகளை
எதிர்க்கும்எங்க திமிர்அழகு

எங்களோட வீரத்தின்
அடையாளம் ஐல்லிக்கட்டு
எவன்அதை தடுத்தாலும்
அங்கேயே அவனைமுட்டு

மக்கள்கேட்கும் சட்டத்த
கொடுக்காத நீதியெதற்கு
நிதிவாங்கி நீதீசொல்லும்
நீதிமன்றத்திற்கு மதிப்பெதற்க்கு

தடையுடைத்து ஜல்லிக்கட்ட
தைரியமா நடத்துவோம்
அதற்காக கைதுசெய்தால்
அப்பவும்மீசை முறுக்குவோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com