இன்றைய தாலாட்டு: கவிஞர் பி. மதியழகன்

தாலாட்டு பாடும் அன்னையும் ஆயாவும்
அடிமையானார்கள் விதவிதமான டிவி சீரியலில்
ஆராரோ கேட்க வேண்டிய குழந்தையும் அழுது
புரண்டு அழகாய் போனை இறுக பிடித்து
இசையோடு இன்புற விளையாடுது போக்கிமோனை!

திரையிசைப் பாடலைத்தாலாட்டாய் பலமுறை கேட்டு
திருப்தி அடையாத குழந்தையும் உறங்குவது
என்னமோ உண்ட மயக்கத்தில்தான்!

அன்பை பொழியும் அத்தையும் சித்தியும்
ஆளுக்கொரு அறையில் அடைந்து கிடப்பது
அவரவர் முகநூலில், இது நடப்பது தினம்தோறும்
வாட்சப் குருப்பில் வண்டி வண்டியாய் அரசியல்
கதைகள் பேசும் தாத்தாவும், இருப்பதும் ஓர் அறையில்!

அப்படியும் இப்படியும் ஆனதுகுழந்தைக்கு
வயசு ஆறு மாதம்,இதை அப்படியே கவனித்த
அப்பனும் போனான் பள்ளிக்கும் அட்மிசன் வாங்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com