அன்னையின் பாட்டு
தேனின் இனிமையாய்
மழலையின் செவிகளுக்கே !
உறங்க வைக்க அல்ல
உறவை அன்பால் கட்டி வைக்க
உறங்கும் மழலையை ரசிக்கும்
உன்னதத் தாயின் தாலாட்டு !
அன்று தாலாட்டும் சத்தம்
அலை பாயும் தெருவெங்குமே
இன்று கேட்ட முடிகிறதோ
தொலைக்காட்சி சத்தம் மட்டுமே !
திரை இசைப்பாடல் மட்டுமே
இன்னிசைத்தாலாட்டாய் ஒலிக்கும் !
தாழ் இட்ட கைகளுக்கு
தாலாட்ட நேரமில்லையா !
அவசர உலகம் நேரமில்லை
பாசம் நேசம் பழகிப் பேச
பண் இசைக்க மனம் வேண்டுமே !
இன்றைய தாலாட்டு
அன்றைய தாலாட்டு
என்றும் அது தாயின் பாட்டு
தாலாட்டித் தூங்குவோம் !