இன்றைய தாலாட்டு: கா. மகேந்திரபிரபு

அன்னையின் பாட்டு   
தேனின் இனிமையாய்   
மழலையின் செவிகளுக்கே !    

உறங்க வைக்க அல்ல 
உறவை அன்பால் கட்டி வைக்க 
உறங்கும் மழலையை ரசிக்கும் 
உன்னதத் தாயின் தாலாட்டு !

அன்று தாலாட்டும் சத்தம் 
அலை பாயும் தெருவெங்குமே 
இன்று கேட்ட முடிகிறதோ  
தொலைக்காட்சி சத்தம் மட்டுமே !

திரை இசைப்பாடல் மட்டுமே
இன்னிசைத்தாலாட்டாய்  ஒலிக்கும் !
தாழ் இட்ட கைகளுக்கு 
தாலாட்ட நேரமில்லையா !
அவசர உலகம் நேரமில்லை 
பாசம் நேசம் பழகிப் பேச 
பண் இசைக்க மனம் வேண்டுமே !

இன்றைய  தாலாட்டு 
அன்றைய தாலாட்டு 
என்றும் அது தாயின் பாட்டு 
தாலாட்டித்  தூங்குவோம் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com