அங்கே அவன் உறங்குகிறான்..
ஆறடி நீளத்தில் மூன்றடி ஆழத்தில்..
மண்ணில் உதித்த அவன்..
மண்ணோடு மக்கிப் போனான்..
அவனைப் பெற்றெடுத்த தாயின்
அன்பான அரவணைப்பில் வளர்ந்து..
அவளின் கண்ணிர்துளிகளின் உப்பளமாக..
அவன் கல்லறையின் மேலே படிந்தது..
வாழ்நாளில் அவன் சாதித்தது என்ன..?
அவனைப் பாகமாகக் கொண்ட அவன்
அன்பு மனையாள் கேட்ட கேள்வி..
அன்னைத் தந்தையைத் தவிக்கவிட்டு
ஆனந்தம் அடைந்த அவன் வாழ்வு..
அடிமனதில் முட்டிமேலே எழும்பி..
புறக்கிளம்பிய அவன் கண்ணிர் துளிகள்..
கல்லறையை நிறைத்திருக்கும் காட்டுப்பூவில்
பனித் துளிகளாய் அமர்ந்து ஒளிர்ந்தது...!!