கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: இளந்தென்றல் திரவியம்

மனித உயிர் பயணப்படும்
சுடுகாட்டினி கடைசி வழியெங்கும்
இறைந்து கிடக்கின்றன உதிரிப் பூக்கள்.

இறுதி அஞ்சலியை 
மலர் தூவி முடித்துவிடுகிறீர்கள் நீங்கள்..
பூக்கள் மட்டுமே 
தங்கள் உயிர் தூவி 
உயிரை ஆலாபிக்கிறது.

காற்றோடும் நெருப்போடும்
கரைந்து போகும் உடலுக்கு அருகில்
கண்ணீரோடு கண்ணீராக 
கடைசி வரைக் காத்துக்கிடப்பன
பூக்கள் மட்டுமே.

பூங்கொத்து கொடுத்து வரவேற்ற 
அதே பூமி
மலர் வளையத்தோடு 
விடைகொடுக்கிறது.

ஒரு சாவில் தான்  பற்பலஅர்த்தங்களைக் 
கற்றுக்கொடுக்கின்றன பூக்கள்...

வாழ்வின் அர்த்தங்களை என்று தான் 
கற்றுக்கொள்வோமோ நாம்
அந்த பூக்களைப் போல

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com