சிலமனிதர்கள் அழுதார்கள்
பலமனிதர்கள் தொழுதார்கள் – அந்த;
கல்லறைக்குள் பிணமாகயிருக்கும் மனிதர்,
நல்லவர் என்பதால்…..
அந்த கல்லறைக்கு மேலே விழுந்திட்ட பூக்கள்,
கண்ணீர் துளிவிட்டதாம்..!
கல்லறைக்குள் பிணமாகயிருக்கும்
மனிதனுக்காவா..இல்லை தானும்,
உதிர்ந்த பூக்களானதை எண்ணியா
யார் மனதில், என்ன, என்பதை, யார் அறிவார் இதில்,
கல்லறைப் பூக்கள் மட்டும், விதி விலக்கா…