பாவங்கள் செய்தால்தான் படைத்திடுவான் மீண்டும். !
படைத்தவனை உருகிடவே பாடிடுவோம் நாளும்.!
காவலாகக் காத்திடுவான் கனிந்துருகி நெஞ்சம். !
கரைசேர்ப்பான் பிறவியினைக் காலமெல்லாம் தஞ்சம்.!
ஆவலாக அலைந்திடுவார் அரக்கராக வஞ்சம்.!
அமைதியில்லா ஆவியாக அலைந்திடுமே யெங்கும். !
ஏவலாக வாழ்ந்திடுவார் இதயத்தில் தீயாய் !
எழுபிறவியும் உண்டென்பார் ஏங்கிடுவார் நாயாய்.!
புவியினிலே பிறந்தவர்கள் புண்ணியங்கள் செய்தால்
புதுப்பிறவி இல்லாமல் பூரணமாய் முக்தி.!
தவிக்கின்ற வாழ்க்கையும்தான் தவிர்த்திடவே வேண்டும். !
தணியாத இறையடியே தாங்குதலே யாண்டும்.!
குவித்திடுவார் செல்வங்கள் குன்றாகத் தானே.!
கொள்வாரோ தன்னுடனே கொண்டிடவே யெங்கும். !
நவில்கின்ற தத்துவங்கள் நான்மறைகள் சொல்லும்.!
நன்றாக வேண்டிடுவோம் நம்பிக்கை வெல்லும். !