அயலவர் அடிமை ஆட்சிதனை எதிர்த்து
முயலவனை முக்கண்ணன் அழித்துபோல்
முயன்று போரெடுத்தாள் அக்கால வீரமங்கை
தாலி தங்கத்தை வாங்கிக் குடிக்கும்
தாலி கட்டியவன் தரமில்லா நிலைக்கு
மார்தட்டி போரெடுத்து தன் குழந்தைதனை
காரெனக் காப்பவள் இக்கால வீரமங்கை
எடுத்த பிறப்பில் வாழ்வாங்கு வாழ
கடும்தடைகள் எதிர்த்துக் கண்டவன் காம
விழி பார்வையையும் தீண்டலையும் தாண்டி
வழி தேடுபவள் எக்காலத்திலும் வீர மங்கை