மாசிப்பனியும் போயிற்று
மரங்களில் துளிர்களும் வந்திடுச்சு
மன்மத வசந்தம் மலர்ந்திடுச்சு
தென்றல் காற்றும் வீசிடுச்சு
கோடை வெயில் கொளுத்திடவே
நிழல்கள் குளுமை தந்திடவே
குயில்கள் மரங்களில் குந்திடும்
குருவிகள் கிளைகளில் கூச்சலிடும்
குரங்குகள் கிளைகளில் ஊஞ்சலாடும்
கூடிக் கும்மாளம் இடும்
மனிதர் மட்டும் விதிவிலக்கா
மரநிழல்களைத் தேடிப் படுப்பர்
வீடுகளில் விசிறிகள் இல்லை
வேண்டிய காற்று இல்லை
இயற்கை அன்னை எமக்களித்த
இலைகள் நிறைந்த மரமளிக்கும்
கோடைகால நிழலே சுகம்,சுகம்
ஓட்டைகள் நிறைநிழலே சுகம் சுகம்
மரங்கள் இயற்கை அளித்த வரங்கள்
மறந்தும் வெட்டாதீர் வேண்டுதல் விடுகிறேன்