ஆறோடும் நீரோடும்
வாழ்ந்த அந்தக்கால
பெரியவர்கள் புனிதர்கள்,
தூய்மையை ஆற்றின்
புனிதத்தை மதித்தவர்கள்
வணங்கியவர்கள்
ஆறோடும் நீரோடும்
கானல் நீராய், மணல்
மட்டும் காணும்
இந்தத் தலைமுறை
ஆறோடும் நீரோடும்
சுவடுகூட தெரியாமல்
போகும் எதிர்கால
தலைமுறை
ஆறோடும் நீரோடும்
பொற்காலம் கடந்து,
பொறாதகாலம் காணும்,
கலிகாலம் காணப்போகும்
நிலையே உண்மை
உணராத மனித
ஜீவன்கள் சுயநலம்
பாடி பிழைக்க எதிர்
காலம் தேடும் பணி
தான் ஆறோடும்
நீரோடும் கேள்விக்குறியாக