குழந்தையின் குரல்: கவிஞர்.கோவிந்தராஜன் பாலு

உள்ளத்தில் நல்லெண்ணம் ஒப்பற்ற தெய்வம்
   உலகினிலே உன்னைப்போல் ஒருவருமில் லையே.
கள்ளமில்லா மலேயென்னைக் கண்ணாக வளர்த்து
  கனிவோடும் கடவுளாகக் காட்சிதந்திட் டாயே.
அள்ளமுடி யாதேவுன் அன்பின்செல் வத்தை
   அளக்கமுடி யாதேவுன் ஆசைமனத் தையே.
பிள்ளையாய் உன்வயிற்றில் பிறப்பதற்கே நானும்
 பெருந்தவத்தைச் செய்தேனோ பெருமைக்கொண் டேனே.

என்னுள்ளம் சொல்கின்ற ஏற்றமிகுக் கருத்தை
   இதயத்தில் பதிப்பாயா ஏக்கத்தில் நானே.
தன்மொழியில் எல்லோரும் தரணியிலே பேச
   தமிழினிலே பேசிடவே தடையேனம் மாசொல்.
அன்பால்நான் அழைக்கின்றேன் அம்மாவுன் னையே.
    அடிக்கத்தான் வருகின்றாய் அம்மாசொல் லாதே.

நன்மொழியாம் நற்றமிழில் உள்ளத்தில் நல்லெண்ணம் ஒப்பற்ற தெய்வம்
உலகினிலே உன்னைப்போல் ஒருவருமில் லையே.
கள்ளமில்லா மலேயென்னைக் கண்ணாக வளர்த்து
கனிவோடும் கடவுளாகக் காட்சிதந்திட் டாயே.
அள்ளமுடி யாதேவுன் அன்பின்செல் வத்தை
அளக்கமுடி யாதேவுன் ஆசைமனத் தையே.
பிள்ளையாய் உன்வயிற்றில் பிறப்பதற்கே நானும்
பெருந்தவத்தைச் செய்தேனோ பெருமைக்கொண் டேனே.

என்னுள்ளம் சொல்கின்ற ஏற்றமிகுக் கருத்தை
இதயத்தில் பதிப்பாயா ஏக்கத்தில் நானே.
தன்மொழியில் எல்லோரும் தரணியிலே பேச
தமிழினிலே பேசிடவே தடையேனம் மாசொல்.
அன்பால்நான் அழைக்கின்றேன் அம்மாவுன் னையே.
அடிக்கத்தான் வருகின்றாய் அம்மாசொல் லாதே.
நன்மொழியாம் நற்றமிழில் நாமணக்கத் தானே
   நானழைப்பேன் அடித்தாலும் நல்லம்மா யென்றே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com