குழந்தையின் குரல்
கேளாதவரே
குழலினிது என்பர்.
மனிதனின்
கவலைகளைத் தீர்க்கும்
குழந்தையின்
சிரிப்பு குரல்.
மனிதர்கள்
கேட்க க் கூடாத து
குழந்தைகளின்
அழுகுரல்.
பெற்ற தாயாலே
பிரித்து பார்க்க முடியும்
குழந்தைகளின் குரல் வழியான
கோரிக்கைகள்.
குழந்தையுடையது என்றாலும்
ஒவ்வொரு குழந்தையிடமும்
ஒவ்வொரு விதமான குரல்.
கபடம் இல்லாத து
குழந்தையின் குரல்.
கள்ளம் இல்லாத து
குழந்தையின் குரல்.
அதிக பட்சம்
ஒரு குடும்பத்துடனே
முடிந்து விடுகின்றன
குழந்தையின் குரல்.