சப்த வெளி விட்டு வா நிசப்த வெளியில் கொஞ்சம் உலாவருவோம்...அங்கே ...துள்ளித் திரியும் மீன்கள் உன் கால்களை கொஞ்சம் கடித்துப் பார்க்கட்டும் துள்ளிக் கொண்டு கால்களை எடுத்து விடாதே...தனக்கான அரசாங்கத்தில் நானே ராசாவெனசுதி மாறாமல் கத்திப் பாடும் வானம்பாடி காண்.மொட்டவிழ காத்திருக்கும் வண்டு தேனருந்த... உன் அதட்டலில் அதன் கனவுகலைந்திடாமல் பார்த்துக்கொள்.நிசப்த வெளியில் நீ மட்டும் வா பெண்ணே! நாமும் சப்தமில்லாமல் காதல் செய்வோம். சலசலக்கும் ஓடை! நீருக்கும் சங்கீதம் தெரியுமாம் உன் சப்தம் கொடுக்கும் வளையல்கள் ,கொலுசொலி நிசப்த வெளியில் தூங்கும் கடலுக்கும் தொந்தரவாகமல் காதல் மொழி பேசலாம் வா ...