வானம் வாய் கொப்பளித்த வெள்ளித் துளிகளை பிஞ்சு மனங்கள் கோர்த்துத் கோர்த்து கழுத்துக்கு மாலை செய்கின்றனர் ....கால்களால் தாளமிட்டு பசிக்கு அழும் குரலுக்கு சந்தம் சேர்த்து மெல்லிசை அமைக்கின்றனர்....செல்ல மழையின்முதுகில் மெதுவாயத் தடவி கைக்குட்டைக்குள் அடைத்துவிட்டு செல்லப் பிராணியாய் புதுப் பெயர் சூடிவிடுகின்றனர் ...ஒளிர்ந்து பார்க்கும் மேகக் கூட்டங்களை மேசை வைத்து எட்டிப்பிடிக்க மேடைகள் கேட்கின்றனர் ...ஆயிரம் மொழிகள் பேசியும் செல்ல மழை இன்னும் சிணுங்குகிறது பிஞ்சு மனங்களின் தொட்டிலில் தூக்கிச்செல்ல .....தங்க மலை மின்னுவதுபோல் பிஞ்சுகளின் தேகங்களும்செல்ல மழையில்ஒளி வட்டமொன்றை திருடித்தான் இருக்குமோ ....!பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்சொல்ல முடியாத துன்பங்களை புதைத்து விட்டுப்போகின்றன...அவற்றின் கைகளால் ......