இதமான தூறல் மழை..அது மத, இன, மொழிநாடு, வயது பேதமின்றி எல்லோர்க்கும் பிடித்த இனிமையான செல்லமழை..பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் கொஞ்சிட ஆசைகொள்ளாமனிதம் எங்கும் உளவோ?குடையைத்தான் துறந்துவிட்டு நனைந்திடவே அழைக்கும் மழை..!மனக்கவலைகளை புறந்தள்ளிவிட்டுதேகம் நனைத்து ஆராதிக்ககைநீட்டி அரவணைக்கும் மழை!சுற்றியிருக்கும் தாவரங்களெல்லாம் உயிர்கொண்டு பசுமையாக்கும் மழை!பல் கொட்டிய பெரியவர்களையும்அரிசிப்பல் பாலகர்களையும்ஆர்வம் ஆசையை தூண்டிவிட்டு மனதளவில் ஒன்றாக்கியே செல்ல மழையில் நனைந்திடபிஞ்சு மனதாய் மாற்றிடும் அற்புத ஆற்றல் கொண்ட அழகான செல்ல மழை!சூரிய ஒளியும் இத்துடனேகாலையிலோ மாலையிலோ இணைந்திட்டாலே அற்புதமாய் வானவில்லைநீலவண்ண வானிலே...அழகுறவே வரைந்திடுமே!மயில்களும் தோகைவிரித்தாடும்.. காக்கை, குருவி பறவை கூட நனைந்து அழகாய் சிலிர்த்திடும் அழகை காண கண்கள் நூறு வேண்டும்!