மழை பொழியும் வேளையிலே
மயங்கி நின்றேன் மாலையிலே
தேநீர் கோப்பைக் கையினிலே
தேனாய் இனித்தது மழையினிலே
குழந்தையின் சிரிப்பில் மனம் பூக்கும்
மழையால் பூக்கள் மணம் வீசும்
மழலையின் மொழியில் மெய்மறக்கும்
மழையின் சப்தத்தில் மெய்சிலிர்க்கும்
பிஞ்சுக்குழந்தை கைவிரித்திருக்குது
உனைத்தாங்க குழந்தையின் கைகளில்
குழந்தையாகிட வந்திடுவாய்
உலகம் காத்துக்கிடக்குது உனக்காக
எம்மைத் தாலாட்டிடவும் நீராட்டிடவும்
வந்திடுவாய்
கள்ளம் இல்லா குழந்தை போலே
கரைகள் இல்லா அன்பைப் போலே
அழகாய்ப் பெய்திடும் மாமழையே-நீ
என்றும் எங்கள் தேவதையே....!