அழுத குழந்தையைசிரிக்க வைத்ததுவான் அன்னையின்புன்னகை சிதறல்கள்!மேகசேலை மூடிபாலூட்டுது வானம்மழை!குழந்தையை தாலாட்டியதுதாயின் மடியாய்மாறிய மழைநீர்!தாலாட்டுப் பாவாய்மாறியதுமழையின் ஓசை!மகிழ்ச்சியில்விளையாடியது குழந்தைவான் அன்னை தந்தஅன்பு முத்தங்களால்!மழைநீர் காகிதத்தில்அன்புக் கவிதைகள்எழுதித் தள்ளினபிஞ்சுகளின் விரல்கள்!ஆசையாய் அணிந்தஆடையை கழற்றஅடம்பிடிக்கின்றன பிஞ்சுகள்நீராடை எனும்புத்தாடையை சூடியதால்!இலை குடையைப்பிடிக்கிறது குழந்தைமழையில் நனைந்தசிற்றெறும்புக்கு!வேனில் காலத்துகுடையாய்மாறிய சேலைசொல்லிக் கொடுத்ததோ?செல்ல மழையில்வெள்ளமாய்பெருக்கெடுத்து ஓடியதுபிஞ்சுகளின் மகிழ்ச்சி!