அண்ட சராசரத்தின் மறுமுனையிலிருந்து அவலக் குரல் அந்தரங்கங்கள் அபச்சாரமாகி விட்டதாக அணங்குகளின் கூற்று.வழி தவறிப் போன காமத்தினால் காமுகன்களின் காளியாட்டக் கதைகள்.களிப்புற்று இருக்கவேண்டிய பாலர்கள் கொடும் புள்ளிகளால் கடத்தப் படும் கொடுமை.காலச் சக்கரத்தின் கரை ஆட்டத்தில் கள்ளப் பணம் சேர்க்கும் கரும் புள்ளிகள் .அஃறிணையிலும் கூட இலக்கணம் கண்டு விடலாம் ஆனால், ஆறறிவு மாக்களின் அபூரணப் பயணம் - எதில் முடியும்?.இது புவன தேவதையின் வீழ்ச்சியா?அல்லது காலதேவதையின் வெற்றியா?