நெஞ்சமே உணர்நதி்டு
நினைந்து நினைந்து நெக்குருகிப் போன மனதில்
தொலைந்து போன உறவுகளால்
கலைந்து கிடக்கும் கனவுகள்...
கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சை தஞ்சமுறச் செய்தும்
வார்த்தைகள் வடித்து வடித்தும்
வசப்படுத்திய நடிப்புச் சுதேசிகளை
எண்ணி துடிக்காதிரு மனமே!
வாழ்க்கைப் பந்தயம்
வட்டத்துக்குள் வளைவதல்ல
கூட்டத்தில் கூடிப் பிதற்றும்
இந்த வஞ்சனை செய்வாரோடுதான்
நெஞ்சுரம் கொண்டு புறப்படு
உனை மிஞ்சிடும் வல்லமை
எவர்க்கேனும் உண்டோ...?