அந்நாளே  திருநாள்  : அழகூர்.  அருண். ஞானசேகரன்

மதவுணர்வை கிளரிவிடும் மூடர்கள் கூட்டம்
   மாண்பற்ற மாக்களென்றே ஆகிடும் கூட்டம் !
உதவாதாம் என்பதனை உணர்ந்திட வேண்டும்
    உண்மையிதை உணராக்கால் நமக்கே நட்டம்!

விதண்டாவிதம் இதனைநாம் விலக்கிட தகுமா ம்
    வீணர்களின் கொட்டமது அடங்கிட வேண்டும் !
அதர்மமிது எந்நாள்தான் ஒழிந்திடத் தகுமோ,
     அந்நாளே நமக்கெல்லாம் திருநாள் ஆகும் !

சாதிமதம்  ஒழிந்திட  வேண்டும் - இனிய
        சமரசமே  நிலைபெற  வேண்டும் !
வேதியன்  சூத்திரன் இவனெனும் - கொடிய
        வேற்றுமைகள்  அழிவுற  வேண்டும் !

போதிமர  புத்தனின்  கருத்துக்கள் - தன்னை
        போற்றிமக்கள்  வாழ்ந்திட  வேண்டும் !
ஆதிநிலை  திரும்பிட  வேண்டும் - நமக்கெலாம்
         அந்நாளே  திருநாள்  ஆகும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com