மதவுணர்வை கிளரிவிடும் மூடர்கள் கூட்டம்
மாண்பற்ற மாக்களென்றே ஆகிடும் கூட்டம் !
உதவாதாம் என்பதனை உணர்ந்திட வேண்டும்
உண்மையிதை உணராக்கால் நமக்கே நட்டம்!
விதண்டாவிதம் இதனைநாம் விலக்கிட தகுமா ம்
வீணர்களின் கொட்டமது அடங்கிட வேண்டும் !
அதர்மமிது எந்நாள்தான் ஒழிந்திடத் தகுமோ,
அந்நாளே நமக்கெல்லாம் திருநாள் ஆகும் !
சாதிமதம் ஒழிந்திட வேண்டும் - இனிய
சமரசமே நிலைபெற வேண்டும் !
வேதியன் சூத்திரன் இவனெனும் - கொடிய
வேற்றுமைகள் அழிவுற வேண்டும் !
போதிமர புத்தனின் கருத்துக்கள் - தன்னை
போற்றிமக்கள் வாழ்ந்திட வேண்டும் !
ஆதிநிலை திரும்பிட வேண்டும் - நமக்கெலாம்
அந்நாளே திருநாள் ஆகும் !