அந்நாளே திருநாள்:  வ.தனலட்சுமி.

சேற்றில் கால் வைத்து
அனைவரையும்
சோற்றில் கை வைக்க செய்யும்
உத்தமனே!!!

அறவழியில் போராடும்
தியாகியே!!!
அனைவருக்கும் உணவளிக்கும்
அட்சய பாத்திரமே!!!

நீயோ இன்று தலைநகரத்தில்
உண்ணாவிரதம் இருத்தல்
மண் சோறு சாப்பிடுதல்
அரை நிர்வாண கோலமென்று
அடுக்கடுக்காய் 
போராட்டங்கள் மேற்கொண்டாய்
இதற்கு முடிவே இல்லையென்று
உன் வாழக்கையை
முடித்துக் கொண்டாயோ
என் சகோதரனே!!!

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
என்பார்கள்
என் விவசாயின் சிரிப்பில்
இந்தியாவின் எதிர்காலத்தை
காணலாம்
அவன் ஆனந்தத்தில்
திளைக்கும்
அந்நாளே திருநாள்!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com