சுங்கச் சாவடி இல்லாத சாலைகள்...தங்கத்தின் மோகம் இல்லாத மக்கள்...பொங்கும் மகிழ்வளிக்கும் இயற்கை வளங்கள்...எங்கும் நிறைந்த அந்நாள் திருநாள்...கையூட்டு இல்லாத நல்லதோர் அரசு...பொய்புரட்டு இல்லாத நல்லதோர் உலகம்...மெய்வருத்தி பாடுபடும் வேளாண் மக்கள்...கைமேல் பலனடையும் அந்நாள் திருநாள்...அன்னை மொழிக்கு அனைத்திலும் முதன்மை...விண்ணைத் தொடுகின்ற நாட்டின் வளர்ச்சி...மண்ணை நேசிக்கும் நாட்டுப் பற்று...கண்ணில் தெரிந்திடும் அந்நாள் திருநாள்...