இறைவனை தரிசிக்க வரிசையில்
இடையில் நுழையும் நபரைக்
கண்டால்.
தட்டில் விழும் பணத்திற்கேற்ப
அர்ச்சகர் தரும் பூக்களை பார்த்தால்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின்
பண்பில்லாத செயலைப்
பார்த்தால்.
நேர்மையான வேலைக்காரனை
நேரமில்லாமல் உழைக்கச் சொன்னால்.
பேருந்தில் பெண்களை
பரிகசிக்கும் ஆண்களைக்
கண்டால்.
நம் அனைவருக்கும்
யுத்தம் செய்யும் கண்களே...