நவரசத்தைக் காட்டும்
நல்ல முகங்களில்...
பிரதானப் பங்கு
கண்களுக்கே யென்று
அனைவரும் அறிவர்!
அகத்தால் உணர்வர்!
கனிவான பார்வையில்
காதல் மலரும்!
இரக்கப் பார்வையில்
இரட்டிப்பாகும் மகிழ்ச்சி!
கோபப் பார்வையில்
கொண்டாட்டம் குறையும்!
வார்த்தைகள் விளக்காததை...
பார்வைகள் விளக்கிடும்!
கள்ளப் பார்வையும்...
காந்தப் பார்வையும்...
கள்ளம் செய்வோரின்
திருட்டுப் பார்வையும்...
உலகுக்கு அவரை
உணர்த்திடும் பார்வைகள்!
உக்கிரப் பார்வையில்
உலகின் கொடுமையை
இறைவன் அழிப்பதாய்
இவ்வுலகோர் நம்புவர்!
கண்கள் செய்யட்டும்
காதல் யுத்தத்தை!
காதல் ஒன்றால்தான்
கவினுலகம் வாழ்கிறது!
காதலர்க்கு மட்டுமே...
பூவுலகம் சொர்க்கமாகும்!