அன்பே உன் காந்தப்பார்வையால்
நின்று போன எனது இதய
துடிப்பு கூட இயங்குகிறது
என்னவளின் பார்வைக்கு
முன்னால்
சலங்கை கூட சத்தமிட மறுக்கிறது
உயிரே உன்
யுத்த பார்வையினால் தான்
கடல் அலைகூட இயங்குகிறதா?
உன் விழி வெளிச்சத்தில்
அமாவாசை கூட
பெளர்ணமியாய் தெரிகிறது
ஜொலிக்கும் உன்
பார்வையின் முன்
வைரமும், வைடூரியமும் கூட
மங்கலாகிவிட்டது அன்பே!
உன் யுத்தம் செய்யும்
கண்களை எதிர்க்க
துணிவு இல்லை.