சமூகத்தின் சிந்தனையை
நிலையை மாற்றிடவே
விழித்து எழுந்தது கண்கள்
போர்களத்தில் வீரர்கள்
அமைதியைக் காத்திட
விழித்து எழுந்தது
வறுமையின் நிலைமையை
வென்றேன் இமை விழியில்
அவல நிலையை
காணாமல் செல்லும் மானிடர்கள்
தாயின் கருவறையில்
குழந்தையின் குமுறல்
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம்
இவ்வுலகில் போரிடுவோம்
மனித நேயத்தில்
நேயமற்ற போராட்டங்கள்
தடுப்பு செய்வோம் விழிகளில்
கெட்ட செயல்களை
காணும்போது உள்ளம் கொதிக்கிறது.
வெளிப்படையாய் கண்கள்
காண்கிறது
இளைஞனே விழித்து எழு
புதியதோர் உலகைப் படைப்போம்
அமைதியைக் காப்போம்….