வாழையடி வாழையென நமக்கெல்லாம் வந்திட்ட வளங்களைநாம் சீராகக் காக்காமல் சிதைத்திங்குபாழாகச் செய்ததொரு தலைமுறையாய் ஆனோமே ! பின்திரும்பி பார்த்துணரும் நன்நேரம் இதுதானே !மண்பானை, பீங்கானை மறந்தேதான் ப்ளாஸ்டிக்கை 'மாடர்னாய்' பார்த்தோமே ! மாசாச்சு நமைசுற்றி !முன்னேறும் வழியென்று "கேட்ஜெட்"டின் பின்சென்று அதில்மூழ்கி மறந்தோமே உறவோர்கள் நிலைபற்றி ! "நிலமெங்கள் உரிமை"யென ஆற்றுவழி பாதையிலும் புதுவீடு கட்டிகுடி புகுந்ததனால் நீர்வழிகள்...வளமெல்லாம் சேர்க்காமல் வறண்டிங்கு போனதுவே ! வருந்தியேதான் என்செய்ய திருந்தஒரு வாய்ப்பிதுவே !வந்திடும்நம் சந்ததியர் முன்னோர்கள் தந்தவற்றை வாழ்வினிலே காணாமல் போகின்ற நிலைவருதே !முந்தியேதான் சேர்ந்திடுவீர்! வருகின்ற தலைமுறைக்கு மிச்சமதை மீட்டிடுவோம்! நல்லவழி காட்டிடுவோம் !