தேவையான பொருட்கள்
முழு பச்சைப்பயறு - 1 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1-2
சீரகம் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
பெசரெட்டு செய்ய தேவையான எண்ணெய் அல்லது நெய்
(ஆந்திராவில் இதை நெய்யில் தயாரிக்கும் வழக்கம் உண்டு)
செய்முறை:
பச்சைப்பயறை 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். அதிக நேரம் ஊறினால், மெல்லிய ரோஸ்ட்டான பெசரெட்டு வராது. ஊறிய பயறை வடித்து, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து பதமாக அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லை சுட வைத்து, மிதமான சூட்டில் தோசை போல் மெல்லியதாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்த பெசரெட்டை அல்லம் பச்சடியுடன் பரிமாறவும்.