தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு - ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
பச்சரிசி - கால் கிண்ணம்
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கு ஏற்ப மாற்றிக்
கொள்ளலாம்)
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் நறுக்கின தேங்காய், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், தோசை கல்லில் தோசை போன்று ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான அடை தோசை ரெடி.