அளவுஇயன்ற ஏழ்உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துஉரைத்த
அளவுஇயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளஉரையால் பெறல்ஆகும் வான்ஓங்கு பெருவளமே.
அளவற்ற ஏழு உலகங்களில் வாழ்கிற எல்லாருக்கும் பெருமான், கண்ணன்.
அத்தகைய கண்ணனை, வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட, அழகிய குருகூரில் அவதரித்த சடகோபன் அன்போடு போற்றிய பெருமைமிக்க அந்தாதிப் பாடல்கள் ஆயிரம்,
அவற்றுள் இந்தப் பத்துப் பாடல்களிலும் உள்ள வளம் நிறைந்த சொற்களைப் பாடுவதால், வானளவுக்கு உயர்ந்த பெருவளத்தைப் பெறலாம்.