உயர்வுஅற உயர்நலம் உடையவன் எவன் அவன்,
மயர்வுஅற மதிநலம் அருளினன் எவன் அவன்,
அயர்வுஅறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர்அறு சுடர்அடி தொழுதுஎழு என் மனனே.
தன்னைவிட உயர்வாக எதுவும் இல்லை என்கிற அளவுக்கு உயர்ந்த குணங்களைக் கொண்டவன், என்னிடமிருக்கும் அறிவின்மை அழியும்படி அறிவாகிய நலனை வழங்கியவன், சோர்வில்லாத அமரர்களின் தலைவன் எம்பெருமான்.
என் மனமே, துயரங்களை அறுக்கும் அவனது ஒளிநிறைந்த திருவடிகளைத் தொழுவாயாக, அதன்மூலம் பிறவிக்கடலிலிருந்து கரையேறுவாயாக.