பரஞ்சோதி, நீ பரமாய் நின் இகழ்ந்து மற்று ஓர்
பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர்உலகம் படைத்த எம்
பரஞ்சோதி, கோவிந்தா, பண்புஉரைக்கமாட்டேனே!
உயர்ந்த ஒளிவடிவானவனே, நீ சிறந்த தெய்வமாக இருக்கிறாய், உன்னைத் தவிர இன்னொரு பெரிய சோதிவடிவம் ஏதும் இங்கே இல்லை என்னும்படியாக நீ திகழ்கிறாய், உனக்குள்ளே பரந்த உலகங்களைப் படைத்த எங்கள் பரஞ்சோதியே, கோவிந்தா, உன்னுடைய பண்புகளை என்னால் விவரிக்க முடியவில்லையே!
•••
பாடல் - 4
மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலை மாஞாலம் நின்
மாட்டுஆய மலர்புரையும் திரு உருவம் மனம்வைக்க,
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டே நீ மனம்வைத்தாய், மாஞாலம் வருந்தாதே?
மலரிலே அமர்ந்த பிரம்மனால் படைக்கப்பட்டது இந்தப் பெரிய உலகம், இதில் வாழ்கிறவர்கள் மலர் போன்ற உன்னுடைய திருவுருவத்தை நெஞ்சில் வைத்து வணங்க இயலாதவர்கள்.
ஆனால் நீயோ, அவர்கள் மேலும் குழப்பமடையும்படி பல மதங்களை உருவாக்கினார், அவற்றைப் பற்றிச் சிந்திக்கும் புத்தியை அவர்களுக்குக் கொடுத்தாய், இதையெல்லாம் செய்துவிட்டு, நீ துளசிமலர் மாலையில் விருப்பம் கொண்டாய், (ஏதும் தெரியாதவன்போல் இருக்கிறாய்), இதனால் உலகம் வருந்தாதோ? (நீயே தனித்தெய்வம் எனும் கருத்தை அவர்களுக்குப் புரியவைப்பாய்.)