பாடல் - 11
கட்டுஎழில் சோலை நல் வேங்கடவாணனை,
கட்டுஎழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டுஎழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
கட்டுஎழில் வானவர் போகம் உண்பாரே.
மணமுள்ள, அழகிய சோலைகள் நிறைந்த நல்ல வேங்கடமலையிலே எழுந்தருளியிருக்கும் பெருமானை, பாதுகாப்பான அரண்களையுடைய, அழகிய தென்குருகூர்ச் சடகோபன் தொடையழகோடு அமைந்த ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்கள், முற்றிலும் அழகானவர்களான தேவர்களின் போகத்தை அனுபவிப்பார்கள்.