தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு, எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர்வகையில் கொடிதாய், எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி, கனை இருளே.
செறிந்த இருளே, எம்பெருமான் நாரணனை எண்ணி நாங்கள் எங்களுடைய மடநெஞ்சத்தை இழந்தோம், ஆற்றாமையைச் சொல்லி அழுதுகொண்டிருக்கிறோம், நீயோ, நடுவில் வந்து எங்களைத் துன்புறுத்துகிறாய், பகைவர்களைவிடக் கொடுமை செய்கிறாய், நெடுங்காலம் இப்படி எங்களுடன் பகையாகவே இருக்கப்போகிறாயா? நீ வாழ்க.