விடுவேனோ என் விளக்கை, என் ஆவியை,
நடுவேவந்து உய்யக்கொள்கின்ற நாதனை,
தொடுவேசெய்து இளஆய்ச்சியர் கண்ணினுள்
விடவேசெய்து விழிக்கும் பிரானையே.
எம்பெருமான் என்னுடைய ஞானவிளக்கு, என் உயிர், நடுவேவந்து நான் பிழைக்கும்படி என்னை ஆட்கொண்ட நாதன், குறும்புச் செயல்களைச் செய்துவிட்டு, இளம் ஆய்ச்சிமார்களை நேசப்பார்வை பார்க்கிற பிரான்... இத்தகைய பெருமானை நான் விடுவேனா? (விடமாட்டேன்!)