என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுஉடை
முன்னை அமரர் முழுமுதலானே.
நப்பின்னையின் நீண்ட, மூங்கில்போன்ற தோள்களை அணைத்து மகிழ்கின்ற சிறப்புடைய பெருமான், அமரர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் காரணமாகத் திகழ்கிறவன், அத்தகைய பெருமான், என்னைப் பிரிந்தாலும், என்னுடைய நல்ல நெஞ்சத்தைப் பிரிய எண்ணமாட்டான்.