திருஉடம்பு வான்சுடர், செந்தாமரை கண், கை கமலம்,
திருஇடமே மார்வம், அயன்இடமே கொப்பூழ்,
ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ,
ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள் கலந்தானுக்கே!
வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தான் எம்பெருமான், அவனது திருமேனி சூரியனைப் போன்றது, கண் செந்தாமரையைப் போன்றது, கை தாமரை மலரைப் போன்றது, அவனுடைய மார்பு திருமகளின் இருப்பிடமானது, தொப்புள் பிரம்மனின் இடமானது, மீதமுள்ள இடமும் சிவபெருமானின் இருப்பிடமாகும்.