பாடல் 10
அந்தோ, அணுகப்பெறு நாள் என்று, எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்,
கொந்துஆர் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணிவண்ணா.
கொத்தாக மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநாவாயிலே வந்து எழுந்தருளியிருக்கும் எங்கள் மாமணிவண்ணனே, நான் உன்னை அடைகின்ற நாள் என்றைக்கோ என்று எப்போதும் ஏங்குவேன், மனம் கலங்கித் ‘திருமால்’ என்று உன்னை அழைப்பேன், அடடா!