பாடல் 4
ஆள்வான் ஆழி நீர்
கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே
பாற்கடலில் பள்ளிகொண்டு இவ்வுலகை ஆள்பவன், பகைவர்களுக்கு எமனாகத் திகழ்பவன், ஆதிசேஷனாகிய பாம்பைப் படுக்கையாகக் கொண்டவன், எம்பெருமான். அத்தகைய பெருமானின் திருவடிகளில் மலர்களை இட்டு தினமும் வணங்குங்கள்.