78. குருகாம் வயிரமாம் - பாடல் 9

ஒளி வீசும்
78. குருகாம் வயிரமாம் - பாடல் 9

பாடல்: 9

விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம்
          விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம்
பட்டுருவ மால் யானைத் தோல் கீண்டானாம்
         பலபலவும் பாணி பயின்றான் தானாம்  
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம்
        என் உச்சி மேலானாம் எம்பிரானாம்
கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும்
       கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

உருவம்=நிறம்: சூழல்=நிலை; கட்டுருவம்=இளமையான அழகான உருவம் கொண்ட மன்மதன்  

பொழிப்புரை:

கருகாவூர் எந்தையாகிய சிவபெருமான், செந்நிற ஒளி வீசும் சோதியாக உள்ளான்; தேவர்கள் அறியமுடியாத நிலையினான்; தன்னை எதிர்த்து வந்த யானையைத் தனது கை நகத்தால் கீறி அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டவன்; பல விதமான தாளங்களுக்கு ஏற்ப கூத்தினை ஆடும் திறமை கொண்டவன்; அட்ட மூர்த்தியாக விளங்குபவன்; எட்டு தோள்களைக் கொண்டவன்; அழகிய இளைய வடிவம் கொண்ட மன்மதனை, நெற்றிக் கண்ணால் விழித்து பொசுக்கியவன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான், தனது திருவடியினை எனது தலை மேல் வைத்தவன், அவனே எனது தலைவன். அவன் பல அடியார்களுக்கும், கண் போன்று வழிகாட்டியாக உள்ளான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com