பாடல் 4:
நீடு காடு இடமாய் நின்ற பேய்க்கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே
ஆடினார் அழகாகிய நான்மறை
பாடினார் அவர் பாலைத் துறையரே
விளக்கம்:
நீடு காடு=நீண்ட காடு: ஆர்க்க=ஆரவாரிக்க:
பொழிப்புரை:
நீண்ட காட்டினைத் தாங்கள் வாழும் இடமாகக் கொண்ட பேய்க்கணங்களும், கூடி நின்ற பூத கணங்களும், மிகுந்த ஆரவாரத்துடன் ஆட, அவைகளின் ஆடலுக்கு இணைந்து ஆடும் சிவபெருமான். அழகான நான்மறைகளை பாடியவாறே ஆடுகின்றார். அத்தகைய திறமை வாய்ந்த அவர் பாலைத்துறை தலத்தில் உறைகின்றார்.