85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 3

திருவாரூர் திருமூலட்டானனே
85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 3


பாடல் 3:

    மலையான் மடந்தை மணாளா போற்றி
            மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
    நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி
            நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி
    இலை ஆர்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி
            ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
    சிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றி
            திருமூலட்டானனே போற்றி போற்றி

விளக்கம்:

மழவிடை=இளமையான இடபம்; பொழில்=சோலைகள் சூழ்ந்த உலகம். 

பொழிப்புரை:

மலையரசனாகிய இமவானின் மகள் பார்வதியின் கணவனே, இளைய காளையினை வாகனமாக உடையவனே, எனது நெஞ்சத்தில் நிலையாக நிற்பவனே, நெற்றியில் ஒற்றைக் கண் உடையவனே, இலை வடிவாக அமைந்த முத்தலைச் சூலம் ஏந்தியவனே, ஏழு உலகங்களாகவும் ஏழு கடல்களாகவும் உள்ளவனே, மூன்று புரங்களையும் ஒரு வில்லால் எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com