மக்காவ் ஓபன்: சாய்னா அதிர்ச்சித் தோல்வி

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
மக்காவ் ஓபன்: சாய்னா அதிர்ச்சித் தோல்வி

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சாய்னா 17-21, 17-21 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 226-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜங் இமனிடம் தோல்வி கண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய ஜங், அதை மிக எளிதாக 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார். முந்தைய ஆட்டங்களில் சாய்னா முதல் செட்டை இழந்தபோதும், அடுத்த செட்களில் அபாரமாக ஆடி வெற்றி கண்டிருந்தார்.
அதனால் இந்த ஆட்டத்திலும் அவர் சரிவிலிருந்து மீள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவரும் 2-ஆவது செட்டில் அபாரமாக ஆடியதோடு, 6-0 என முன்னிலை பெற்றார். ஆனால் சரிவிலிருந்து வேகமாக மீண்ட ஜங் 7-7 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையை எட்டினார். தொடர்ந்து அசத்தலாக ஆடிய ஜங் 2-ஆவது செட்டையும் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சீனாவின் ஜுன் பெங் 21-19, 21-9 என்ற நேர் செட்களில் இந்தியாவின் சாய் பிரணீத்தை தோற்கடித்தார். இதன்மூலம் மக்காவ் ஓபனில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com